Homeசித்த மருத்துவம்கற்பூரவள்ளி இலையின் பயன்கள்

கற்பூரவள்ளி இலையின் பயன்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

இது கொடிபோல் படரும்.
வீடுகளில் தொட்டிகளிலும் வளர்க்கலாம் . இலை வட்டமாக தடிப்பாக இருக்கும் . இலை ஓரத்தில் அரிவாள் வெட்டுப்போன்று கூரிய முனைகள் இருக்கும். இதன் மேல் சாம்பல் பூத்ததுபோன்றிருக்கும்.இதன் இலையைக் கசக்கினால் கற்பூர வாசனை வீசும் .

குழந்தைகளுக்கு ஏற்படும் செங்கிரந்திக்கு கற்பூரவல்லி இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதில் குன்றிமணி இலைச் சாறு , வெங்காயச்சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி காலை மாலை கொடுத்துவர நோய் குணமாகும்.

கற்பூரவள்ளி

காசம் , இருமல், கபம் வாதத் தொடர்பான நோய்கள் ஆகியனவற்றிற்கும் கற்பூரவல்லி மருந்தாகப் பயன்படுகிறது.

பூவரச மரங்கள் பெருமளவில் நமது நாட்டில் காணப்படுகின்றன . இதன் இலை , பூ , காய் , பட்டை அனைத்துமே மருத்துவப் பயன்பாட்டுக்குரியன . பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தியுள்ளவை. இதன் பூவை அரைத்து சிரங்கு நோய்க்குப் பூசிவரக் குணமாகும்.

பூவரசமரத்தின் இலைகளைக் காயவைத்து அதை நெருப்பி லிட்டுச் சாம்பலாக்கி தூள் செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி , சிரங்குகளுக்கு மேற்பூச்சாகப் பூசி வந்தால் நோய் குணமாகும்.

Poovarasam

உடலில் காணப்படும் வீக்கங்களுக்கு பூவரசன் இலையை அரைத்து வேகவைத்து களிபோலக் கிண்டி தினசரி காலை , மாலை பூசிவர வீக்கம் குறையும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments