Homeகாய்கறிகள்மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் | Maravalli Kilangu Benefits in...

மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் | Maravalli Kilangu Benefits in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் | Maravalli Kilangu Benefits in Tamil

Maravalli Kilangu | மரவள்ளி கிழங்கு

பொதுவாக கிழங்கு வகைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இந்த உணவுகளுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு.

அந்த வரிசையில் நாம் இன்று காண இருப்பது மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள்.

Maravalli Kilangu in English Tapioca Chips

மரவள்ளி கிழங்கு செடி

மரவள்ளி கிழங்கு செடி

Maravalli Kilangu | மரவள்ளி கிழங்கு

மரவள்ளி கிழங்கு (Tapioca Cassava)

மரவள்ளிக் கிழங்கு வெப்ப மண்டல பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான கிழங்கு உணவு வகை ஆகும்.

மரவள்ளிக் கிழங்கானது மலை பாங்கான இடங்களிலும் மற்றும் வறண்ட நிலப் பகுதிகளிலும் விளையக்கூடியவை.

மரவள்ளிக் கிழங்கானது (Maravalli Kilangu) செடியின் வேர்களில் உருவாகக்கூடிய கிழங்கு வகையாகும். இதில் கார்போஹைட்ரேட், கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி,வைட்டமின் ஏ போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கு ஆனது மேற்கத்திய நாடுகளில் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

அமேசானை பிறப்பிடமாக கொண்ட மரவள்ளிக்கிழங்கு ஆனது இந்தியாவில் 17ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் ஒரு உணவுப் பொருளாக இன்றுவரை மரவள்ளிக்கிழங்கு ஆனது உள்ளது.

மரவள்ளி கிழங்கு பயன்கள்

மரவள்ளி கிழங்கு முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும்.

உலகில் மரவள்ளி கிழங்கின் உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் ஆறு சதவீதம் (6%) உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 3.1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.60 லட்சம் டன்கள் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மரவள்ளிக் கிழங்கு ஆனது இந்தியாவில் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

தமிழர்கள் மரவள்ளி கிழங்கை சமையலில் அவித்து,கடைந்து,கறியாக்கி உண்கிறார்கள். இக்கிழங்கை நிழலில் உலர்த்தி அரைத்து மாவாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மரவள்ளி கிழங்கு என்பது ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

இது மாவு பொருளைத் தரும் முக்கிய உணவு பண்டமாக திகழ்கிறது.

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு பொருள் இந்த மரவள்ளிக்கிழங்கு.

மரவள்ளிக் கிழங்கில் இருந்துதான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகின்றன.

மனிதர்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மரவள்ளிக் கிழங்கு வழங்குகிறது.

மரவள்ளி கிழங்கில் ஸ்டார்ச், குளுக்கோஸ், பிரக்டோஸ் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கில் கால்சியம், பாஸ்பரஸ், உயிர்ச்சத்து சி அதாவது வைட்டமின் சி உள்ளது.

மரவள்ளி கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றலை நாம் பெறலாம்.

மரவள்ளி கிழங்கில் புரதச்சத்தோ அல்லது பிற சத்துகளோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

நாம் அன்றாட வாழ்க்கையில் மரவள்ளிக்கிழங்கை பல வகையில் பயன்படுத்துகிறோம்.

மரவள்ளி கிழங்கு நன்மைகள்

இந்த ஜவ்வரிசியானது உப்புமா,பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்க பயன்படுகிறது.

உதாரணமாக, பாயசம் போன்ற இனிப்பு சார்ந்த உணவுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஜவ்வரிசி உடைய மூலப்பொருளாக இந்த மரவள்ளிக்கிழங்கு திகழ்கிறது.

இந்த மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவு பொருள் ஜவ்வரிசி ஆகும்.

மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு ஜவ்வரிசி என பெயர் வர காரணம் ➨ இது ஜாவாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.

தோலுரித்த மரவள்ளிக்கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளில் காணப்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும்.

சிலர் அவித்த மரவள்ளிக்கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு.

Maravalli Kilangu Other Names| மரவள்ளி கிழங்கு மற்ற பெயர்கள்

மரவள்ளி கிழங்கு மற்ற பெயர்கள்

கப்பக்கிழங்கு,குச்சி கிழங்கு,குச்சிவள்ளி கிழங்கு,மரச்சீனி கிழங்கு

Maravalli Kilangu Benefits | மரவள்ளி கிழங்கு பயன்கள்

மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து மட்டுமல்லாமல் உயிர்ச்சத்துக்களும் தாதுக்களும் உள்ளது.

இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த மரவள்ளிக் கிழங்கின் நன்மைகளை பற்றி பார்ப்போம். வாருங்கள் நண்பர்களே,

மரவள்ளி கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன.

Maravalli Kilangu benefits

இந்த கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல், குடல் புற்றுநோய், குடல் வலி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகை செய்கிறது.

இந்த கிழங்கானது சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

பொதுவாக, வயிற்றுப் போக்கானது நமது வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களின் அளவு குறையும்போது வயிற்றுப் போக்கானது ஏற்படுகிறது. இந்த மரவள்ளி கிழங்கு ஆனது வயிற்றில் இருக்கக்கூடிய நுண்ணுயிர்களின் அளவை அதிகரிக்கிறது.

வயிற்றுப்போக்கு,வயிற்று இரைச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வருவது நன்மை பயக்கும்.

வயிற்றில் பூச்சி அல்லது வயிற்றுப்புழு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் இந்த மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.

மரவள்ளி கிழங்கு ஆனது முடி உதிர்வை தடுக்கிறது. மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, அதை தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு பின்பு அலசவும். இதேபோல் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி முன்பை விட அடர்த்தியாக வளரும்.

பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆனது மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.

இன்றைய காலத்தில் கண் பார்வை பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்பிலும் இந்த மரவள்ளி கிழங்கு பயன்படுத்தப்படுகின்றது.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் போலேட் (folate) ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. இது மட்டுமல்லாமல் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்பு குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.

மரவள்ளி கிழங்கில் உருவாக்கப்படும் ஜவ்வரிசி கஞ்சி வயிற்றுப்புண் மற்றும் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஞாபக மறதியை குறைப்பதுடன் மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் பணியை செய்கின்றன. இதனால் ரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை இது குணப்படுத்துகிறது.

மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.

நமக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி மற்றும் சாதாரண தலைவலிக்கு கூட இந்த மரவள்ளி கிழங்கு ஆனது பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கை அப்படியே உண்ணலாம் அல்லது அதை கழுவி அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்.

Maravalli Kilangu

மரவள்ளிக்கிழங்கு ஆனது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு உயிர்ச்சத்து சி அதாவது வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அவசியம் தேவை. இந்தச் சத்துக்கள் அனைத்தும் மரவள்ளி கிழங்கில் இருக்கிறது இதை சாப்பிட்டு வர நன்மை பயக்கும்.

Maravalli Kilangu Disadvantages | மரவள்ளி கிழங்கு தீமைகள்

மரவள்ளிக் கிழங்கு தீமைகள்

மரவள்ளி கிழங்கில் அதிக சத்துக்களும் மருத்துவ நன்மைகளும் இருந்தாலும் கூட சில பேருக்கு அல்லது சில வகையாக இந்தக் கிழங்கினை சாப்பிட்டால் பக்க விளைவுகள் அல்லது பிரச்சனைகள் வரக்கூடும்.

மரவள்ளிக்கிழங்கின் தோலினை முறையாக நீக்கிய பின்பு சமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கை சமைக்கும் போது இஞ்சி உடன் கலந்து சமைக்க கூடாது. அதாவது இஞ்சியை கலந்து சமைத்தல் கூடாது. இஞ்சி கலந்த உணவுப் பொருள்களுடன் உட்கொள்ளக் கூடாது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

மூளை பக்கவாதம் உள்ளவர்கள் அல்லது மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் இந்த மரவள்ளி கிழங்கினை சாப்பிடக்கூடாது.

மரவள்ளிக்கிழங்கை பச்சையாக அதிக அளவில் சாப்பிடக்கூடாது. இது வயிற்றுக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும் அதாவது அலர்ஜியை ஏற்படுத்தும்.

மரவள்ளி கிழங்கினை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிடக்கூடாது. இவ்வாறு ஐந்து நாட்களுக்கு மேல் இந்த மரவள்ளிக் கிழங்குகளை வைத்து சாப்பிடும் போது பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, சமையலுக்கு பயன்படுத்தும் போது மரவள்ளிக்கிழங்கை நன்றாக பார்த்து எடுத்து சமைக்கவும். அதுபோல மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டபின் இஞ்சி, சுக்கு போன்ற உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.

தொழிற்சாலைகளில் மரவள்ளிக்கிழங்கு

மாப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக்கிழங்கு ஆனது மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படும் பொருள்களை வைத்து, திருவனந்தபுரத்தில் குடிசை தொழிலாக கோந்து மற்றும் சலவை கஞ்சி தயாரிக்கப்பட்டு வழக்கமான சந்தையிடல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜவுளி தொழிலில் துணிகளுக்கு மொட மொடப்பான மடிப்பு ஏற்படுத்த மற்றும் இறுதி வேலைகளுக்கும் இந்த மரவள்ளிக் கிழங்கில் இருந்து பெறப்படும் மாவு பயன்படுத்தப்படுகிறது.

உணவுத் தொழில்களிலும் மற்றும் ஒட்டக்கூடிய கெட்டியான பசை தயாரிப்பிலும் இந்த மரவள்ளிக் கிழங்கில் இருந்து பெறப்படும் மாவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

காகித தொழிற்சாலைகளில் காகித பூச்சு, நாள்காட்டி தயாரிப்பு, அடிநிலை ஆகிய வேலைகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து பெறப்படும் மாவு பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாமே

மருதாணி பற்றி நீங்கள் அறியாத மருத்துவ பயன்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments