HomeTNPSC GROUP 4TNPSC GROUP 4 GENERAL TAMIL TEST

TNPSC GROUP 4 GENERAL TAMIL TEST

THATSTAMIL-GOOGLE-NEWS

 TNPSC GROUP 4 GENERAL TAMIL TEST  

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு 1 கொடுக்கப்பட்டுள்ளது.

 

அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு 1

 

1. ‘தமிழ்நாட்டு பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

அ) ஜெயகாந்தன்

ஆ) அறிஞர் அண்ணா

இ) திரு.வி.க

ஈ) மு.வரதராசனார்

விடை: ஈ

2. ‘தமிழ் தியாகப்பர்’ என போற்றப்படும் நபர் யார்?

அ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆ) இலக்குமணப்பிள்ளை

இ) உடுமலை நாராயணகவி

ஈ) பாபநாசம் சிவன்

விடை: ஈ

3. ‘ஆளுடைய பிள்ளை’ எனப்படுபவர்?

அ) கவிஞர் வாலி

ஆ) திருநாவுக்கரசர்

இ) வ.உ.சிதம்பரம் பிள்ளை

ஈ) திருஞானசம்பந்தர்

விடை: ஈ

4. ‘இறைவனின் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) சுந்தரர்

இ) திருநாவுக்கரசர்

ஈ) திருஞானசம்பந்தர்

விடை: ஈ

5. ‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என்று புகழப்பட்டவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) அறிஞர் அண்ணா

இ) திரு.வி.க

ஈ) மு. வரதராசனார்

விடை: ஆ

6. ‘செல்லிதாசன்’ எனப்படுபவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) திரு.வி.க

ஈ) மு.மேத்தா

விடை: அ

7. ‘மூதறிஞர்’ எனப்படுபவர்?

அ) ராஜாஜி

ஆ) பெரியார்

இ) அறிஞர் அண்ணா

ஈ) காமராசர்

விடை: அ

8. பேரறிஞர் எனப்படுபவர்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) ராஜாஜி

இ) பெரியார்

ஈ) காமராஜர்

விடை: அ

9. ‘தத்துவ போதக சுவாமி’ எனப்படுபவர்?

அ) எல்லிஸ்

ஆ) ஜி.யு.போப்

இ) ஜோசப் பெஸ்கி

ஈ) ராபர்ட். டி. நொபிலி

விடை: ஈ

10. ‘பகுத்தறிவு பகலவன்’ எனப்படுபவர்?

அ) பெரியார்

ஆ) அறிஞர் அண்ணா

இ) காமராசர்

ஈ) ராஜாஜி

விடை: அ

11. ‘பாட்டுக்கொரு புலவன்’ எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

விடை: அ

12. ‘உரைநடையின் தந்தை’ எனப்படுபவர்?

அ) மீனாட்சி சுந்தரனார்

ஆ) மறைமலை அடிகள்

இ) தேவநேய பாவாணர்

ஈ) வீரமாமுனிவர்

விடை: ஈ

13. ‘உரைநடையின் வேந்தர்’ எனப்படுபவர்?

அ) ஆறுமுக நாவலர்

ஆ) பரிமேலழகர்

இ) வீரமாமுனிவர்

ஈ) நக்கீரர்

விடை: அ

14. ஒப்பிலக்கண தந்தை எனப்படுபவர்?

அ) ஆறுமுக நாவலர்

ஆ) வீரமாமுனிவர்

இ) கால்டுவெல்

ஈ) ஜி.யூ.போப்

விடை: இ

15. ‘தமிழ் நாடகத்தின் தந்தை’ எனப்படுபவர்?

அ) சுஜாதா

ஆ) பம்மல் சம்பந்த முதலியார்

இ) டி.கே.சண்முகம்

ஈ) ஆர்.எஸ்.மனோகர்

விடை: ஆ

16. ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ எனப்படுபவர்?

அ) பொன்னம்பல அடிகளார்

ஆ) குன்றக்குடி அடிகளார்

இ) பரிதிமாற் கலைஞர்

ஈ) மறைமலை அடிகளார்

விடை: ஈ

17. ‘தமிழ் நாடக தலைமை ஆசிரியர்’ எனப்படுபவர்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்

இ) அவ்வை சண்முகம்

ஈ) பாரதிதாசன்

விடை: ஆ

18. ‘கவியோகி’ எனப்படுபவர்?

அ) சுப்ரமணிய பாரதியார்

ஆ) சுத்தானந்த பாரதியார்

இ) கண்ணதாசன்

ஈ) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

விடை: ஆ

19. ‘கவிக்குயில்’ எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) கவிமணி

இ) பாரதியார்

ஈ) சரோஜினி நாயுடு

விடை: ஈ

20. ‘திவ்ய கவி’ எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) பிள்ளை பெருமாள் ஐயங்கார்

இ) பாரதியார்

ஈ) கவிமணி

விடை: ஆ

21. ‘ஆசுகவி’ எனப்படுபவர்?

அ) வீரகவிராயர்

ஆ) ஔவையார்

இ) திருவள்ளுவர்

ஈ) மாணிக்கவாசகர்

விடை: அ

22. ‘காந்திய கவி’ எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) ராமலிங்கம் பிள்ளை

ஈ) திரு.வி.க

விடை: இ

23. ‘கவிவலவ’ எனப்படுபவர்?

அ) சேக்கிழார்

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) புகழேந்தி

ஈ) திருவள்ளுவர்

விடை: அ

24. கவிஞரேறு மற்றும் பாவலர் மணி எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) வாணிதாசன்

இ) பாரதியார்

ஈ) கண்ணதாசன்

விடை: ஆ

25. ‘திரைக்கவித் திலகம்’ எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) வைரமுத்து

இ) மருதகாசி

ஈ) வாலி

விடை: இ

26. ‘கவியரசு’ எனப்படுபவர்?

அ) மருதகாசி

ஆ) வாணிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) சுரதா

விடை: இ

27. இசைக்குயில் எனப்படுபவர்?

அ) சொர்ணலதா

ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி

இ) சித்ரா

ஈ) ஜானகி

விடை: ஆ

28. ‘புதுவைக்குயில்’ எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) வாணிதாசன்

விடை: ஆ

29. ‘பகுத்தறிவு கவிராயர்’ எனப்படுபவர்?

அ) நாமக்கல் வெ. இராமலிங்கனார்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சுரதா

ஈ) இராமச்சந்திர கவிராயர்

விடை: ஆ

30. ‘திருமுறை கண்ட சோழன்’ எனப்படுபவர்?

அ) முதலாம் ராஜேந்திரன்

ஆ) முதலாம் ராஜராஜன்

இ) முதலாம் குலோத்துங்கன்

ஈ) கரிகால் சோழன்

விடை: ஆ

31. ‘வைக்கம் வீரர்’ எனப்படுபவர்?

அ) காமராசர்

ஆ) அறிஞர் அண்ணா

இ) பெரியார்

ஈ) ராஜாஜி

விடை: இ

32. ‘நாமக்கல் கவிஞர்’ எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) வெ.இராமலிங்கம் பிள்ளை

இ) தமிழன்பன்

ஈ) இராமலிங்க அடிகள்

விடை: ஆ

33. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?

அ) தர்மாம்பாள்

ஆ) ராமாமிருதம் அம்மையார்

இ) அசலாம்பிகை அம்மையார்

ஈ) நீலாம்பிகை அம்மையார்

விடை: ஆ

34. ‘கவிக்கோ’ என்பவர் யார்?

அ) அப்துல் ரகுமான்

ஆ) மு.மேத்தா

இ) சுரதா

ஈ) தாராபாரதி

விடை: அ

35. ‘காலா காந்தி’ என அழைக்கப்பட்டவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) அறிஞர் அண்ணா

இ) காமராஜர்

ஈ) எம்.ஜி.ஆர்

விடை: இ

36. ‘அண்ணாமலை கவிராஜன்’ என்று சிறப்பிக்கப்படும் நபர் யார்?

அ) அண்ணாமலை செட்டியார்

ஆ) அண்ணாமலை ரெட்டியார்

இ) சின்ன அண்ணாமலை

ஈ) அழ. வள்ளியப்பா

விடை: ஆ

37. ‘ஆளுடை நம்பி’ எனப்படுபவர்?

அ) திருநாவுக்கரசர்

ஆ) சுந்தரர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தர்

விடை: ஆ

38. ‘ஆட்சி மொழிக் காவலர்’ எனப்படுபவர்?

அ) மு.வரதராசனார்

ஆ) டி.கே.சண்முகம்

இ) சி.இராமலிங்கனார்

ஈ) சி.சுசெல்லப்பா

விடை: இ

39. கபிலரை ‘நல்லிசை கபிலன்’ என்று போற்றியவர்

அ) இளங்கீரனார்

ஆ) நக்கீரர்

இ) நப்பசலையார்

ஈ) பெருங்குன்றூர் கிழார்

விடை: ஈ

40. ‘புலவரேறு’ என்று அழைக்கப்பட்டவர்?

அ) கவிமணி

ஆ) அ.வரதநஞ்சையப் பிள்ளை

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) ஒட்டக்கூத்தர்

விடை: ஆ

41. கபிலரை ‘வாய்மொழிக் கபிலர்’ என்று போற்றியவர்?

அ) இளங்கீரனார்

ஆ) நக்கீரர்

இ) நப்பசலையார்

ஈ) பெருங்குன்றூர் கிழார்

விடை: ஆ

42. ‘பாட்டாளிகளின் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர்?

அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆ) உடுமலை நாராயணகவி

இ) சி.சு.செல்லப்பா

ஈ) பாரதிதாசன்

விடை: அ

43. ‘விஷ்ணு சித்தர்’ என்பது எந்த ஆழ்வார் உடைய இயற்பெயர்?

அ) பேயாழ்வார்

ஆ) பூதத்தாழ்வார்

இ) பெரியாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

விடை: இ

44. வெண்பாவிற்கு ———-

அ) சீத்தலை சாத்தனார்

ஆ) கம்பர்

இ) புகழேந்தி

ஈ) ஒட்டக்கூத்தர்

விடை: இ

45. திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) திருஞானசம்பந்தர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) அப்பூதி அடிகள்

ஈ) திருநாவுக்கரசர்

விடை: ஆ

46. ‘சிறுகதை மன்னர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) ஜெயகாந்தன்

ஆ) சி.சு.செல்லப்பா

இ) புதுமைப்பித்தன்

ஈ) கு.ப. ராஜகோபாலன்

விடை: இ

47. ‘பக்திசாரர்’ என்பது யாருடைய சிறப்பு பெயர்?

அ) பெரியாழ்வார்

ஆ) குலசேகர ஆழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) திருமழிசையாழ்வார்

விடை: ஈ

48. ‘திருக்குறளார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) திருவள்ளுவர்

ஆ) சுரதா

இ) வீரகவிராயர்

ஈ) வி.முனுசாமி

விடை: ஈ

49. ‘ஆட்சிமொழிக் காவலர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) சுரதா

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வெ.ராமலிங்கனார்

விடை: ஈ

50. ‘வர்மன்’ என்ற அடைமொழியால் குறிக்கப்படும் மன்னர்கள் யார்?

அ) பாண்டியர்கள்

ஆ) சேரர்கள்

இ) பல்லவர்கள்

ஈ) சோழர்கள்

விடை: இ

51. ‘செம்பியர்’ என்ற சிறப்பு பெயர் எந்த மன்னர்களை குறிக்கிறது?

அ) சேரர்கள்

ஆ) சோழர்கள்

இ) பல்லவர்கள்

ஈ) பாண்டியர்கள்

விடை: ஆ

52. கபிலரை ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்’ என்று போற்றியவர் யார்?

அ) நப்பசலையார்

ஆ) நக்கீரர்

இ) இளங்கீரனார்

ஈ) பெருங்குன்றூர் கிழார்

விடை: இ

53. ‘ஆளுடைய அரசு’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) சுந்தரர்

இ) திருஞானசம்பந்தர்

ஈ) அப்பர்

விடை: ஈ

54. ‘இக்கால அவ்வையார்’ என்று திரு.வி.க அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

அ) அஞ்சலை அம்மாள்

ஆ) நீலாம்பிகை அம்மையார்

இ) அசலாம்பிகை அம்மையார்

ஈ) அம்புஜத்தம்மாள்

விடை: இ

55. சடகோபன், பராங்குசன், மாறன் என்ற சிறப்பு பெயர்கள் யாரைக் குறிக்கிறது?

அ) நம்மாழ்வார்

ஆ) பெரியாழ்வார்

இ) திருப்பாணாழ்வார்

ஈ) தொண்டரடி பொடியாழ்வார்

விடை: அ

56. ‘பொய்யாநாவிற் கபிலன்’ என்று கபிலரை பாராட்டுபவர் யார்?

அ) நக்கீரர்

ஆ) நப்பசலையார்

இ) நம்மாழ்வார்

ஈ) கம்பர்

விடை: ஆ

57. ‘கவிராட்சசன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

அ) காளமேகப் புலவர்

ஆ) கம்பர்

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) பாரதியார்

விடை: இ

58. ‘உலக உத்தமர்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

அ) காமராஜர்

ஆ) தமிழண்ணல்

இ) மகாத்மா காந்தி

ஈ) ஜவகர்லால் நேரு

விடை: இ

59. ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

அ) முத்துராமலிங்க தேவர்

ஆ) பெரியார்

இ) பேரறிஞர் அண்ணா

ஈ) காமராஜர்

விடை: அ

60. ‘தென்னாட்டுத் திலகர்’ எனப்படுபவர் யார்?

அ) வ.உ.சி

ஆ) பாரதியார்

இ) பகத்சிங்

ஈ) முத்துராமலிங்கத் தேவர்

விடை: அ

61.’ரசிகமணி’ என்னும் அடைமொழிக்கு உரியவர் யார்?

அ) டி.கே.சிதம்பரநாதன்

ஆ) சுரதா

இ) திரு.வி.க

ஈ) ராமலிங்கனார்

விடை: அ

62. ‘சிறுகதை வேந்தன்’ எனப்படுபவர்?

அ) புதுமைப்பித்தன்

ஆ) மருதகாசி

இ) ராஜகோபாலன்

ஈ) வாலி

விடை: அ

63. ‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரர் யாரை போற்றி பாடியுள்ளார்?

அ) அப்பர்

ஆ) சுந்தரர்

இ) திருஞானசம்பந்தர்

ஈ) மாணிக்கவாசகர்

விடை: இ

64. ‘இஸ்லாமிய தாயுமானவர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) நபிகள் நாயகம்

ஆ) அபுபக்கர்

இ) குணங்குடி மஸ்தான்

ஈ) வீரமாமுனிவர்

விடை: இ

65. ‘வரலாற்றுப் புதினத்தின் தந்தை’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

அ) கல்கி

ஆ) அகிலன்

இ) உடுமலை நாராயணகவி

ஈ) ஜெயகாந்தன்

விடை: அ

66. ‘நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர்’ என பாராட்டப்படுபவர் யார்?

அ) பொய்கையார்

ஆ) அரசஞ்சண்முகனார்

இ) கல்லாடனார்

ஈ) சேனாவரையர்

விடை: ஆ

67. ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’ யார்?

அ) பாரதிதாசன்

ஆ) கண்ணதாசன்

இ) பாரதியார்

ஈ) வைரமுத்து

விடை: இ

68. ‘விப்ர நாராயணர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) தொண்டரடி பொடியாழ்வார்

ஆ) நம்மாழ்வார்

இ) திருமால்

ஈ) சிவபெருமான்

விடை: அ

69. ‘நாச்சியார்’ என்ற அடைமொழி யாரைக் குறிக்கிறது?

அ) ஆண்டாள்

ஆ) காரைக்கால் அம்மையார்

இ) வேலு நாச்சியார்

ஈ) நப்பசலையார்

விடை: அ

70. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்?

அ) தாயுமானவர்

ஆ) திருமூலர்

இ) ராமலிங்க அடிகள்

ஈ) பாரதியார்

விடை: ஆ

71. ‘உரையாசிரிய சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுபவர் யார்?

அ) கதிரேசன் செட்டியார்

ஆ) மறைமலை அடிகள்

இ) வீரமாமுனிவர்

ஈ) கோபால கிருஷ்ணமாச்சாரி

விடை: ஈ

72. ‘உச்சிமேற்கொள் புலவர்’ எனப்படுபவர்?

அ) மணக்குடவர்

ஆ) காக்கை பாடினியார்

இ) இளம்பூரணார்

ஈ) நச்சினார்க்கினியர்

விடை: ஈ

73. ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று பாரதியாரால் போற்றப்படுபவர் யார்?

அ) தாயுமானவர்

ஆ) வள்ளலார்

இ) அருணகிரிநாதர்

ஈ) பட்டினத்தார்

விடை: ஆ

74. ‘வன்றொண்டன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

அ) திருநாவுக்கரசர்

ஆ) சுந்தரர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தர்

விடை: ஆ

75. ‘மண் தேய்த்த புகழினான்’ என சுட்டபடுபவன் யார்?

அ) அனுமன்

ஆ) சிவபெருமான்

இ) ராமன்

ஈ) பரதன்

விடை: அ  

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments