HomeTAMIL NADUகுடும்பத் தலைவிக்கு முதலமைச்சர் வழங்கும் ரூபாய் 1000 யாருக்கு ? எங்கு சென்று விண்ணப்பிப்பது ?

குடும்பத் தலைவிக்கு முதலமைச்சர் வழங்கும் ரூபாய் 1000 யாருக்கு ? எங்கு சென்று விண்ணப்பிப்பது ?

THATSTAMIL-GOOGLE-NEWS

குடும்பத் தலைவிக்கு முதலமைச்சர் வழங்கும் ரூபாய் 1000 யாருக்கு ? எங்கு சென்று விண்ணப்பிப்பது ?

‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம் பாருங்கள்..

யார், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
  1. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள நபர்கள் அனைவரும் ஒரு
    குடும்பமாகக் கருதப்படுவார்கள்.
  2. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவராக கருதப்படுவார்.
  3. குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண்மணி மட்டுமே குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
  4. குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால்,
    அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
  5. வீட்டில் திருமணமாகாத தனித்த பெண்கள் மற்றும் கைம்பெண்கள், திருநங்கைகள் அவர்களது தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
  6. 21 வயது பூர்த்தி அடைந்த பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  7. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயதை பூர்த்தி அடைந்த பெண்கள்
    இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
விண்ணப்பிப்பதற்கான பொருளாதாரத் தகுதிகள்

குடும்பத் தலைவிக்கு முதலமைச்சர் வழங்கும் ரூபாய் 1000 யாருக்கு எங்கு சென்று விண்ணப்பிப்பது

ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு’ (ரூபாய் 1000 உரிமைத்தொகை திட்டம்) விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள்.

ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக்
குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள்.

ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள்.

முக்கிய குறிப்பு

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று இந்த விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்திற்கு எங்குச்சென்று விண்ணப்பிக்கலாம் ?

இத்திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் (அதாவது ரேஷன் கடை) ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை (அதாவது ரேஷன் கடை) அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தேவைப்படும்.

ஆதார் அட்டை
ஸ்மார்ட் கார்டு
ரேஷன் கார்டு
கைபேசி எண்
வங்கி கணக்கு விவரங்கள்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார் யார் ?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

  1. ரூபாய் 2.5 இலட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  3. ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி
    செலுத்துவோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  4. மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  6. சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  7. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.
  8. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவர்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிவிலக்குகள்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

இதையும் படிக்கலாமே,

‘எதிர்நீச்சல்’ சீரியலில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் உண்மையாக ஒரு நபர் இருக்கிறார் என இயக்குனர் திருச்செல்வம் சொன்ன தகவல்..யாராக இருக்கும்?
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments