அஷ்ட சூரணம்
அஷ்ட வர்க்க உணவுப்பொடி
தேவையான பொருட்கள் :
🔹சுக்கு 50 கிராம்
🔹மிளகு 50 கிராம்
🔹திப்பிலி 50 கிராம்
🔹ஓமம் 50 கிராம்
🔹சீரகம் 50 கிராம்
🔹சோம்பு 50 கிராம் 50
🔹பெருங்காயம் 50 கிராம்
🔹இந்துப்பு – 50கிராம்
செய்முறை :
🔹இந்துப்பு , பெருங்காயம் நீங்கலாக , பிற சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்துக் கொள்ளவும்.
🔹பின்னர் இவற்றைத் தூளாக்கி இந்துப்பு , பெருங்காயம் இவற்றையும் தூள்செய்து ஒன்றாகக் கலந்து இவற்றையும் , ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பயன்கள் :
🔹குடற்புண் , வாயுக்கோளாறுகள் , பசியின்மை , செரியாமை தீரும்.
🔹இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட மிக்க பசியை உண்டாக்கும்.
🔹இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உணவுப் பொடியாகும்.
🔹இது ‘ அஷ்ட சூரணம் ‘ என்ற பெயரில் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது..