Homeசித்த மருத்துவம்சித்த மருத்துவம்- திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

சித்த மருத்துவம்- திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

திராட்சையை சாப்பிடவேண்டியவர்கள்

🔷ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

🔷பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும்.

🔷குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

🔷திராட்சைப்பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம் , நாவறட்சி நீங்கும்.

🔷திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம் , நாவறட்சி நீங்கும்.

🔷உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.

🔷சொட்டு சொட்டாக நீர் பிரிதல் , நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

🔷உடல் அசதிக்கும் , பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

🚫உலர்ந்த திராட்சை கவனத்திற்கு🚫

🔷சளி பிடித்திருக்கும் போதும் , காச நோய் உள்ளவர்களும் , வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

🔷உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

🔷குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.

💜திராட்சையின் மருத்துவ குணம்💜

🔷ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று . இதில் வைட்டமின் பி 1 , பி 2 , பி 3 , பி 6 , பி 12 , சி , இரும்புச்சத்து , பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.

🔷ரத்த சோகை , மலச்சிக்கல் , ஜீரண கோளாறு , சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

🔷உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.

🔷திராட்சையை உண்பதால் உடல் வறட்சி , பித்தம் நீங்கும் ரத்தம் தூய்மை பெறும் இதயம் , கல்லீரல் , மூளை , நரம்புகள் வலுப்பெறும்.

திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

💜மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து💜

🔷மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து நீங்களே தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த திராட்சை 60 கிராம்
ஏலக்காய் 30 கிராம் ,
சீரகம் 2 கிராம்
வால் மிளகு அரை கிராம்.
ரோஜா இதழ்கள் 2 கிராம்.
கீழாநெல்லி வேர் 5 கிராம்.

இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . இவற்றை வாங்கி வந்து இடித்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி , 100 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும்.

அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வேண்டும்.

மேலும் எளிதான வழியும் ஒன்று உள்ளது . அதாவது . உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர , மலச்சிக்கல் தீரும் இவ்வாறு செய்து வர மலச்சிக்கல குணமாகிவிடும்.

💜உடல் எடையைக் கூட்டலாம் . குறைக்கலாம்💜

🔷உடல் எடையைக் கூட்டவும் , குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது. உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சாக்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலாந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும்.

🔷அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது , கருப்பு திராட்சை பழச்சாறு 200 மிலியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

💜ரத்த சோகைக்கு தீர்வு💜

🔷ரத்த சோகை நோயினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சரியான உணவு இல்லாமை , ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.

🔷ரத்த சோகை என்றதும் ஆப்பிளும் , மாதுளம் பழமும் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ரத்த சோகைக்கு நிரந்தரத் தீர்வு காண உதவுவது திராட்சையாகும்.

🔷ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று இதில் வைட்டமின் பி 1 , பி 2 , பி 3 , பி 6 , பி 12 , சி , இரும்புச்சத்து , பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு.

🔷ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடாந்து திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புது ரத்தம் உருவாகும் ரத்தம் தூய்மையடையும்.

🔷பெண்களுக்கு ஏற்படுமட மாதவிடாய் கோளாறுகளை நிவாத்தி செய்யும்.

🔷திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்க. வாய்ப்பு உள்ளது எனவே மெலிந்த தேகம் கொண்டவாகள திராட்சை சாப்பிடலாம்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments