Homeஅசைவ சமையல்வேலூர் மட்டன் தம் பிரியாணி

வேலூர் மட்டன் தம் பிரியாணி

THATSTAMIL-GOOGLE-NEWS

வேலூர் மட்டன் தம் பிரியாணி(biryani)

தேவையானப் பொருட்கள்(biryani) :

🔹மட்டன் – ஒரு கிலோ
🔹வெங்காயம் – 1/4 கிலோ
🔹தக்காளி 200 கிராம்
🔹இஞ்சி விழுது – 50 கிராம்
🔹பூண்டு விழுது – 50 கிராம்
🔹மிளகாய்த் தூள் -4 டீஸ்பூன்
🔹தயிர் – 200 மி.லி
🔹பட்டை – 1 துண்டு
🔹கிராம்பு – 4
🔹ஏலக்காய் 2
🔹கொத்தமல்லித்தழை – சிறிதளவு
🔹புதினா -4 சிறிதளவு
🔹எலுமிச்சை – ஒரு பழத்தின் ஜூஸ்
🔹கடலை எண்ணெய் – 1/4 லிட்டர்
🔹பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
🔹உப்பு – தேவையான அளவு

dish g5b50a4112 640

செய்முறை(biryani) :

🔹முதலில் வெங்காயம் , தக்காளி , கொத்தமல்லி , புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை ஒரு முறை அலசி விட்டு , அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி , எண்ணெய் சூடானவுடன் , பட்டை , கிராம்பு , ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன் , நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

🔹பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து , 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். அதனுடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து , 5 நிமிடம் மிதமான தீயில் , நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

🔹பின் மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் , 5 நிமிடம் கலக்க வேண்டும். தயிர் , பச்சைமிளகாய் , கொத்தமல்லி , புதினா , தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து , நீர் 1/2 டம்ளர் ஊற்றி , குக்கரை மூடி 4 விசில் வரும் வரை , மிதமான தீயில் வேக விட வேண்டும்.

🔹பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு , உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து , கூடவே 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு , 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது.

🔹பின்பு குக்கரைத் திறந்து , ருசி சரிபார்த்து , எலுமிச்சைச் சாறு கலந்து , மிதமான தீயில் , எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி , நன்கு வடித்த சாதத்தை சேர்த்து , அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.

🔹கடைசியாக அடுப்பில் தோசைக்கல் வைத்து , அதில் சிறிது நீர் ஊற்றி , குறைவான தீயில் , மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ( ஓரத்தில் ) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி , காற்றுப் புகாமல் மூடி , மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை வெய்ட் போல் வைத்து சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும் . தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.தம் முடிந்த பிறகு திறந்து பார்த்தால் கம கம வேலூர் பிரியாணி(biryani) சுண்டி இழுக்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments