மூல நோய் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அற்புத மூலிகைகள்
உள் அழல் ஆற்றி( Demulcent )
உடற் கட்டுகள் சிதைக்கப்படும்போது அல்லது நோய்க் கிருமிகளால் அழிக்கப்படும் போது ஏற்படு கின்ற அழற்சியையும் ( Tnflammation ) உறுத்தலையும் ( Irritation ) நீக்கக் கூடிய பொருள் உள் அழல் ஆற்றியாகும்.
The drug that sooths or Protects tissues and mucoun membranes from irritation.
🪴முக்கிய மூலிகைகள்🪴
🔷குங்கிலியம்
🔷அதிமதுரம்
🔷ஆமணக்கு
🔷செம்பருத்தி
🔷வெண்ணெய்
🔷சீந்தில்
🔷இலுப்பை
🔷தேற்றான் கொட்டை
🔷மணத் தக்காளி
🔷தண்ணீர் விட்டான் கிழங்கு
உபயோகிக்கும் முறைகள்
🪴குங்கிலியம்🪴
இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் குக்கில் வெண்ணெய் மூலச்சூடு , வெளிமூலம் , மூல எரிவு போன்ற நோய்களில் வெளிப்பிரயோகமாக உபயோகிக்க சுகம் தரும். அத்துடன் குங்கிலியம் வெண்ணெய் மேற்கூறிய நோய் நிலைகளில் உட் பிரயோகமாகவும் ஏலத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.
🪴அதிமதுரம்🪴
அதிமதுரத்தை நீரில் போட்டு அவித்து எடுக்கும் தடிப்பான பானத்தை அதிமதுரப் பால் எனலாம்.
இவற்றை வேண்டியளவு அருந்திவர உணவுப் பாதையில் ஏற்படும் விரணங்கள் ஆறும்.
🪴துத்தி🪴
இதன் விதையைப் பொடித்து சீனி கூட்டி 250-500 மி.கி அளவு காலை மாலை சாப்பிட்டு வர , உட் சூடு நீங்கும்.
இதன் இலையை நெய் தடவி வாட்டி மூலத்துக்குப் போட்டுக் கட்டிவர மூலச்சூடு , மூலமுனை ஆகியவை ஆறும்.
🪴ஆமணக்கு🪴
இதன் எண்ணெயை எடுத்து சீலையில் நனைத்து முலைக்காம்பு வெடிப்பு , முலைக்காம்பு புண் ஆகிய வற்றுக்குப் போட ஆறும்.
🪴செம்பருத்தி🪴
மாலை சாப்பிட்டு இலைச்சாறு / குடிநீர் அருந்தி வர , உடற்குடு ஆகியவை நீங்கும் .
🪴இலுப்பை🪴
இதன் எண்ணெயைப் பித்த வெடிப்பு மற்றும் விரணங்களுக்கு பூசி வர சுகம் தரும்.
🪴தேற்றான் கொட்டை🪴
இதன் விதையினால் வெள்ளை , வெட்டை , உட் சூடு ஆகியவை தீரும். இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்தை நாகபஸ்பத்துடன் சேர்த்துக் கொடுக்க மூலநோய். உள் விரணம் தீரும.
🪴சீந்தில்🪴
சீந்திற் சர்க்கரையை அப்பிரக பஸ்பத்துடன் சேர்த்துக் கொடுக்க உடற்குடு , சுரம் நீங்கி தேகம் வன்மையடையும்.
🪴மணத் தக்காளி🪴
இதனைச் சமைத்து உண்ண வாய்ப்புண் ஆறும்.
🪴தண்ணீர் விட்டான் கிழங்கு🪴
இதன் கிழங்கை உலர வைத்துப் பொடித்து , காலை , மாலை 5 கிராம் வரை பசுப்பாலில் கொடுத்து வர வெட்டை , உட்சூடு ஆகியவை தீரும் .