Homeசித்த மருத்துவம்நாட்டு மருந்து-நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாட்டு மருந்து-நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாழிவிற்கு ஏற்ற நாவற்பழம்(Jamun Fruit ) !

🔹நாவல் பழத்தின்(Jamun Fruit ) தாயகம் இந்தியா . இப்போது வெப்பமண்டலப் பகுதிகள் அனைத்திலும் மழைக்காலத்தில் நாவல் பழம் நன்கு கிடைக்கிறது.

🔹நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன . ஒன்று உருண்டை ரகம் , இன்னொன்று நீள ரகம் இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம்.

🔹பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும்.நாவற்பழங்களை மட்டும் சிறதளவ உப்புச் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

🔹கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகா என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.

🔹ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் நாவல் பழத்தில் நீரிழவு குணமாகிறது.

🔹உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இப்பழத்தில் கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து , வைட்டமின் சி . பி ஆகிய தாது உப்புகளும் வைட்டமன்களும் உள்ளன.

🔹புரதச்சத்து 0.7 % ம் , மாவுச்சத்து 14 % ம் இப்பழத்தில் உள்ளன.

🔹சிறுநீரில் சாக்கரையின் அளவு குறைய நாவல் பழத்தின் விதைகளைக் காய வைத்து இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தடவைக்கு 3 கிராம் வீதம் நான்கு வேளைகள் அளந்து இந்தத் தூளை உட்கொண்டால் சிறுநீரில் சாக்கரையின் அளவு குறையும்.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

ஆயுர் வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும்.

🔹நாவற்பழ(Jamun Fruit )மரத்தின் படடைகளை எரித்துக் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

🔹அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்த தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருத்தினால் நீரழிவு நோய் கணிசமாக குறையும். பிறகு தூளின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.

🔹சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும் , மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.

🔹நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சாக்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

🔹மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

மூல நோய்க்கு மருந்து

🔹மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம்(Jamun Fruit )கைகொடுத்து உதவுகிறது.

🔹பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

🔹நாவல் பழம் பலவேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது.
பித்தத்தைத் தணிக்கும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் , இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.

🔹இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும். இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும் , மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

🔹பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக , வைட்டமின் தேவை நாவல மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித தேன் அல்லது வெண்ணிய கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். அளவோடு சாப்பிட வேண்டும்.

🔹நாவல் பழததை குழந்தைகள் உட்பட அனைத்து. வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல் , தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments