திரு.வி.கல்யாண சுந்தரனார் பற்றிய தகவல்கள் | Thiru.V.Kalyanasundaram History in Tamil
திரு.வி.கல்யாண சுந்தரனார்
- திரு.வி.க வாழ்ந்த காலம்: 26 – 08 -1883 முதல் 17 – 09 – 1953 வரை வாழ்ந்தார்.
- திரு.வி.க பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம், துள்ளம் (தண்டலம்).
- திரு.வி.க பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா.
திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார் திரு.வி. கல்யாண சுந்தரனார்.
- கல்யாண சுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும், இசைப் பயிற்சியும் உடையவராகத் திகழ்ந்தார்.
- ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர் கல்யாண சுந்தரனாரின் தந்தை.
- இவர் தந்தை ஆசிரியராக திருவாரூரில் பணி செய்தபோது கல்யாண சுந்தரமும் அங்கேயே வளர்ந்தார்.
- இவர் (திரு.வி.க வின் தந்தை) பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்.
- இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும், நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடக்கத்தில் தன் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் ராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார்.
- அதன் பின்னர் 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கின.
- ஆகையால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைபட்டது. ஆனால் படிப்பில் நல்ல திறமை உடையவராக விளங்கினார்.
- 1904ஆம் ஆண்டு ஆறாம் பருவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்து யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழறிஞர் உடன் நட்பு ஏற்பட்டது.
- அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார்.
- கதிரைவேற்பிள்ளை நீலகிரிக்கு சென்ற பொழுது அங்கு காலமானார்.
- அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டறிந்தார்.
- திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா.கதிரைவேல் என்பவரிடம் தமிழ்ப்படித்தார்.
- பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.
- தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார்.
- சிறந்த மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இவர் தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார்.
- தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார்.
- தொழிற்சங்கத்தைத் தோற்றுளித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப்பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.
சிறப்பு பெயர்
- தமிழ் முனிவர்
- தமிழ் பெரியார்
- தமிழ்ச்சோலை
- தமிழ் புதிய உரைநடையின் தந்தை
- தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
- தொழிலாளர் தந்தை
- பேனா மன்னருக்கு மன்னன் (பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
- இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
- தமிழ் வாழ்வினர்
- இவரது தமிழ் நடையின் காரணமாக இவர் “தமிழ்தென்றல்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
படைப்புகள்
- பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார். திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்.
- சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிப் புரிந்தார். இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது.
- இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
- இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார். வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.
- தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார். ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
- காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.
- பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும், நாட்டையும் பழித்தவனாவான்
- ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையையும் பேசும் மொழியையும் ஒருவன், தாய், தாய், தாய் என்று போற்றுகிறான். நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்
உரைநடை நூல்கள்
- முருகன் அல்லது அழகு
- தமிழ்ச்சோலை
- உள்ளொளி
- மேடைத்தமிழ்
- சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
- மனித வாழ்கையும் காந்தியடிகளும்
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
- தமிழ்த் தென்றல்
- சைவத்திறவு
- இந்தியாவும் விடுதலையும்
- சைவத்தின் சமரசம்
- கடவுட் காட்சியும் தாயுமானவரும்
- நாயன்மார்கள்
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
- தமிழ் நூல்களில் பௌத்தம்
- காதலா? முடியா? சீர்திருத்தமா?
- என் கடன் பணி செய்து கிடப்பதே
- இமயமலை அல்லது தியானம்
- இளமை விருந்து
- பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
- வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை
- பிதற்றல் (மு. வ உதவியுடன் வெளியீடு)
- பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் (1907)
- பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுறையும் (1923)
- காரைக்கால் அம்மையார் திருமுறை (1941)
- திருக்குறள் விரிவுரை (பாயிரம் – 1939)
- திருக்குறள் விரிவுரை (இல்லறவியல் – 1941)
அரசியல் நூல்கள்
- தேசபக்த அமிர்தம் (1919)
- என் கடன் பணி செய்து கிடப்பதே (1921)
- தமிழ்நாட்டுச் செல்வம் (1924)
- தமிழ் தென்றல் (அல்லது) தலைமைப் பொழிவு (1928)
- சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930)
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு பாகம் 1 (1935)
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு பாகம் 2 (1935)
- இந்தியாவும் விடுதலையும் (1940)
- தமிழ் கலை (1953)
பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள்
- தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி
- ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து
- கர்னாடிக் மில் வேலைநிறுத்தம்
- தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும்
- இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு
- ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும்
- பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம்
- வேலைநிறுத்த உரிமை – கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில்
- மில் வட்டாரத்துக் கலகங்கள்
சமய நூல்கள்
- சைவ சமய சாரம் (1921)
- நாயன்மார் திறம் (1922)
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும் (1923)
- சைவத்தின் சமசரசம் (1925)
- முருகன் (அல்லது) அழகு (1925)
- கடவுள் காட்சியும் தாயுமானவரும் (1928)
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1929)
- தமிழ் நூல்களில் பௌத்தம் (1929)
- சைவத் திறவு (1929)
- நினைப்பவர் மனம் (1930)
- இமயமலை (அல்லது) தியானம் (1931)
- சமரச சன்மார்க்க போதமும் திறவும் (1933)
- சமரச தீபம் (1934)
- சித்த மார்க்கம் (1935)
- ஆலமும் அமுதமும் (1944)
- பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி (1949)
பயண இலக்கிய நூல்கள்
- இலங்கை செலவு (இலங்கை பயணம் குறித்த தொகுப்பு நூல்)
பாடல்கள் (அ) செய்யுள்
- முருகன் அருள் வேட்டல் (1932)
- திருமால் அருள் வேட்டல் (1938)
- பொதுமை வேட்டல் (1942)
- கிறிஸ்துவின் அருள் வேட்டல் (1945)
- புதுமை வேட்டல் (1945)
- சிவனருள் வேட்டல் (1947)
- கிறிஸ்து மொழிக்குறள் (1948)
- இருளில் ஒளி (1950)
- இருமையும் ஒருமையும் (1950)
- அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி (1951)
- பொருளும் அருளும் (அல்லது) மார்க்சியமும் காந்தியமும் (1951)
- சித்தன் திருத்தல் (அல்லது) செத்து பிறத்தல் (1951)
- முதுமை உளறல் (1951)
- வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கை பிதற்றல் (1953)
- இன்ப வாழ்வு (1925)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம்
- நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் (1908)
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1921)
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை துணை (1927)
- நாயன்மார் வரலாறு (1937)
- முடியா? காதலா? சீர்திருத்தமா? (1938)
- உள்ளொளி (1942)
- திரு.வி.க.வாழ்க்கை குறிப்புகள் பாகம் ஒன்று (1944)
- திருவிக வாழ்க்கை குறிப்புகள் பாகம் 2 (1944)
இதழ்
- நவசக்தி
- தேசபக்தன் (சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி)
இதையும் படிக்கலாமே
பாரதிதாசன் பற்றிய முழு தகவல்கள் | Bharathidasan History in Tamil