Homeநவகிரகங்கள்9 நவகிரகங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? | ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு என்ன?

9 நவகிரகங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? | ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு என்ன?

THATSTAMIL-GOOGLE-NEWS

நவகிரகங்கள்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை முறைகளை தீர்மானிக்கிறது.

இந்த நவகிரகங்களின் அமைப்பால் மனிதர்களுக்கு நன்மைகள் மற்றும்
தீமைகள் நடக்கின்றன.

ஒருவர் முற்பிறவியில் செய்த நற்செயல்கள் அதாவது போன ஜென்மத்தில் செய்த நல்ல செயல்கள் இந்தப் பிறவியில் நன்மைகளாகவும்,

முற்பிறவியில் அதாவது போன ஜென்மத்தில் செய்த தீமைகள் இந்தப் பிறவியில் தோஷங்களாகவும், கஷ்ட நஷ்டங்கள் ஆகவும் ஜாதகத்தில் மனிதர்களுக்கு வந்தடைகின்றன.

நவகிரகங்கள் தோன்றிய காலத்திலேயே நவதானியங்களும்
தோன்றியது. அந்த நவதானியத்தை வைத்துதான் நாம் நவகிரகங்களை சாந்தப்படுத்துகிறோம்.

நமது உடலும் மற்றும் மனதின் எண்ண ஓட்டமும் நவக்கிரகங்களால்
ஆளப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் உடலின் ஒவ்வொரு பகுதியில் தங்களது சேவையைச் செய்கின்றன. அதாவது இதை தான் சக்கர சுழற்சி என்கிறோம்.

THIRUMANA PORUTHAM | திருமணப் பொருத்தம்

 

THIRUMANA PORUTHAM CALCULATOR

 

நவகிரகங்கள் – சக்கரங்கள்

நமது உடலில் அமைந்து இருக்கும் சக்கரங்கள்:

மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் ஏழு சக்கரங்கள் செயல்படுகின்றன.

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் இந்த ஏழு சக்கரங்கள் தான் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

இந்த ஏழு சக்கர அமைப்புகளும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக் கொன்று தொடர்புடையவை ஆகும்.

ஏழு சக்கரங்கள் என்னென்ன என்பதை மட்டும் இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

navagraha names in tamil

7 சக்கரங்கள் என்னென்ன?

1. மூலாதாரம் சக்கரம்
2. ஸ்வாதிஷ்டானம் சக்கரம்
3. மணிபூரகம் சக்கரம்
4. அனாகதம் சக்கரம்
5. விசுத்தி சக்கரம்
6. ஆக்ஞா சக்கரம்
7. சகஸ்ரஹாரம்

அடுத்த பதிவில் இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் நண்பர்களே.

நமது வாழ்க்கைப்பாதை நல்ல முறையில் அமையவும், நம்மை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லவும் நவகிரகங்கள் உதவுகின்றன.

நண்பர்களே, பொதுவாக நவகிரகங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்…

படைத்தல், காத்தல், அழித்தல் என பரம்பொருள் இருக்க, நவகிரகங்களின் உருவாக்கம் மற்றும் அது செயல்பட வேண்டிய அவசியம் வர காரணம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் பரம்பொருள் படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்கிறார்.

பரம்பொருளால் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்களுக்கு உண்டான கர்ம பலன்களை ஒரே நேரத்தில் வழங்கிவிட முடியாது. அப்படி கர்ம பலன்களை வழங்கினால் அது தர்மமாகாது.ஆதலால் அவர்களுக்கு நன்மை தீமைக்கு ஏற்ப நவக்கிரகங்களை வைத்து அவர்களது தசா புத்தி காலத்தில் நன்மை தீமைகளை பரம்பொருள் வழங்குகிறார்.

சுருங்கக் கூறினால், மனித சரீரத்திற்கு (உடல்) பரம்பொருளே தலைவர்.

அந்த சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்து இருக்கிறார்.

அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் நவ கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மத்தில் செய்த வினையை வைத்து, அதற்கு தகுந்த பலா பலன்களைத் தத்தம் அவர்களது தசாபுத்திகள் நடக்கும்போது சரியாக கொடுத்து வருகின்றனர்.

9 நவகிரகங்கள்:

சூரியன் ➨ தந்தை (ஆத்மா, எலும்பு)

சந்திரன் ➨ தாய் (மனம், இரத்தம்)

செவ்வாய் மற்றும் ராகு ➨ சகோதரர்கள் (பலம், மஜ்ஜை)

புதன் ➨ தாய்மாமன் (வாக்கு, தோல்)

குரு ➨ புத்திரக்காரன் (ஞானம், தசை)

சுக்கிரன் ➨ களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்)

சனி, கேது ➨ ஆயுள் (துக்கம், நரம்புத் தசை)

navagraha

நவகிரகங்களின் குணங்கள் :

உலகம் இயங்க காரணமாக இருப்பது ஒன்பது கிரகங்களாகும். ஒன்பது
கிரகங்களும் தனக்கென உரிய தனித்துவமான குணங்களை பெற்றுள்ளன.

அதாவது,கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நவகிரகங்கள் பற்றிய பார்வை:

சூரியன் பற்றிய பார்வை:

ஒரு மனிதன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா என்பதனையும், அவன் உடலில் உள்ள எலும்பு பலம் உள்ளதா, தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் பலம்
எப்படி? என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் அவனுடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையை அறிந்து சொல்ல முடியும்.

சூரியன் :

  • சூரியனை ஆத்மகாரகன் என்று அழைக்கிறோம்.
  • சூரியனை வைத்தே தகப்பனாரின் நிலை, அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.

சந்திரன் :

  • சந்திரனே உடலுக்கு காரகன் ஆவார்.
  • சந்திரனை ஜோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கிறோம்.
  • சந்திரன் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையவராக இருப்பதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.

செவ்வாய் :

  • செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம் ஆகும்.
  • ரத்தத்திற்கு காரகன் செவ்வாய் ஆவார்.
  • உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய் ஆவார்.
  • ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார்.

புதன்:

  • புதன் வித்யா காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
  • ஜாதகத்தில் கல்வி,மாமன்,அத்தை,மைத்துனர்கள் ஆகியவற்றின் நிலைகளை புதனை மையமாக வைத்து கணிக்கப்படுகிறது.

குரு :

  • குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.
  • 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். இவரை பிரகஸ்பதி என்றும் அழைப்பர்.
  • தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்கக்கூடியவர் குரு ஆவார்.

சனி :

  • சனி, ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
  • வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே. இவர் கர்ம பலன்களை அளிப்பவர் ஆவார்.
  • இவர் கர்ம பலன்களுக்கு ஏற்ப துன்பத்தையும்,நன்மையையும் செய்வார்.
  • அதேபோல், அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் ஆவார்.

சுக்கிரன் :

  • சுக்கிரன் களத்திர காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
  • அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்கிரன் ஆவார்.
  • சுக போகத்திற்கு அதிபதி சுக்கிரனே ஆவார்.

ராகு :

  • ராகுவுக்கு சொந்த வீடு என்று தனியாக கிடையாது. சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார்.
  • அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றையெல்லாம் பெற ராகுவின் அருள் வேண்டும்.

கேது :

  • ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது ஆவார்.
  • மோட்ச காரகனும் இவரே ஆவார்.

நவகிரகங்கள் இருக்கும் இடமும், அதன் பலன்களும் :

12 ராசிக்கட்டத்தில் நவகிரகங்கள் தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நல்ல
மற்றும் தீய பலன்களை அளிக்கின்றன.

சில இடங்களில் நவகிரகங்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடங்களில் இருக்கும் கிரகத்தினால் நல்ல பலன்களும், சில இடங்களில் கிரகத்தின் வலிமையும், பலமும் குறைவதினால் தீய பலன்களையும் அளிக்கின்றார்கள்.

கிரகங்களின் பலன்களை அறியும் பொழுது நாம் பலவிதமான ஜோதிட
ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு நமது ஜாதகத்தில் நாம் பலன் காண
வேண்டும்.

அப்பொழுதுதான் நாம் எடுத்துச் சொல்லும் பலனானது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப நல்ல நிலைமையில் இருக்கும்.

சரியாக ஜோதிட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி கணிக்காமல் இருந்தால் ஜாதக பலன்கள் சரியாக வராது.

அடுத்த பதிவில் இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் நண்பர்களே.

THATS TAMIL

RASI PALAN TODAY

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments